Friday 24 April 2020

எம்சிஓ நீட்டிப்பா? - மக்களை நேரலையில் சந்திக்கிறார் பிரதமர்

புத்ராஜெயா-
கோவிட்-19;வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் அமல்படுத்தப்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை (எம்சிஓ) நீட்டிக்கப்படுமா? இல்லையா? என்பதை பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் இன்று அறிவிப்பார்.

இன்று இரவு 8.00மணியளவில் மக்களுடனான தொலைகாட்சி நேரலையில் பிரதமர் இம்முடிவை அறிவிக்கக்கூடும்.

உலக நாடுகளை உலுக்கி வரும் கோவிட்-19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மார்ச் 18ஆம் தேதி தொடங்கி நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டது. ஏப்ரல் 28 ஆம் தேதியுடன் எம்சிஓ முடிவுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment