Thursday 30 April 2020

ஆடு, புலி அல்ல; குள்ளநரிகளை வீழ்த்தியல் அரசியல் சாணக்கியர் டான்ஶ்ரீ கேவியஸ் #HBDTanSriKayveas

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
அரசியலில் வீழ்ந்தவனை காட்டிலும் வீழ்த்தப்படுவனை சுற்றி நடக்கும் சதுரங்க ஆட்டம் என்பது எளிதில் அவிழ்க்கப்படாத முடிச்சாக நீடிக்கும். அத்தகையதொரு அரசியல் சதுரங்க ஆட்டத்தில் தன்னை சுற்றி நடந்த பல்வேறு துரோகச் செயல்களுக்கு மத்தியிலும் தன் பின்னால் அனிவகுத்த உறுப்பினர்களுக்கும் தனியொரு தலைவனாய் உயிர்த்தெழுந்தார் பிபிபி 
கட்சியின் தேசியத் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ்.

2013ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தனது ஆட்சி நிர்வாகத்தை நிலைபடுத்திக் கொள்ள பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தது அன்றைய தேசிய முன்னணி அரசாங்கம், மக்கள் சேவை, ஆக்ககரமான திட்டங்களுக்கு மத்தியில் 2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தன்னுடைய ஆட்சியை நிலைநிறுத்திக் கொள்ள முற்பட்டார் அன்றைய பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்.

தேசிய முன்னணியின் பங்காளி கட்சிகளாக திகழ்கின்ற அம்னோ, மசீச, மஇகா, கெராக்கான், மைபிபிபி உட்பட பல கட்சிகள் தாங்கள் போட்டியிடவிருக்கும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளில் மக்கள் சேவையை முன்னெடுக்க ஆயுத்தமாகின.

அதன் அடிப்படையில் பகாங் மாநிலத்திலுள்ள கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட முடிவெடுத்து களத்தில் இறங்குகிறார் டான்ஶ்ரீ கேவியஸ்.
கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை தேர்ந்தெடுப்பதற்கு இரு காரணங்களே டான்ஶ்ரீ கேவியசுக்கு முக்கியமானதாக அமைந்தன

 1)  மஇகாவின் தேசியத் தலைவராகவும் கேமரன் மலை நாடாளுமன்றஉறுப்பினராக திகழ்ந்த முன்னாள் அமைச்சர் டத்தோஶ்ரீ ஜி.பழனிவேல் கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு சுயேட்சை நாடாளுமன்றஉறுப்பினராக அறிவிக்கப்பட்ட பின்னர் அன்றைய மஇகாதலைமைத்துவம் அத்தொகுதியில் களப்பணி ஆற்ற தவறியது.. 


2)   பகாங் மாநிலத்தில் பிறந்த வளர்ந்ததினாலும் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகம்மது (தேமு ஆட்சியில்) 2002இல் கேமரன் மலை தொகுதியை தனக்காக உருவாக்கிக் கொடுத்ததும் அதை அன்றைய மஇகாவின் முன்னாள் தலைவர் துன் ச.சாமிவேலு அபகரித்துக் கொண்டதும், தன் கையை விட்டுப் போன தொகுதியை தானே தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற இறுமாப்புமே ஆகும்.

கேமரன் மலை தொகுதியின் மீது தீராத காதல் கொண்டதன் விளைவாக டான்ஶ்ரீ கேவியஸ் ஆற்றிய களப்பணி அளவிட முடியாதது ஆகும்.
2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு இரு வருடங்களுக்கு முன்னரே தொடங்கிய மக்கள் சேவையில் அத்தொகுதியே தனக்கே உரியதாக்கப்படும் என எண்ணிக் கொண்டிருந்த டான்ஶ்ரீ கேவியசின் எண்ணத்தில் பேரிடியை இறக்கியது மஇகா.

தன் கட்சி பிரதிநிதி ஒருவரை அத்தொகுதியின் வேட்பாளராக களமிறக்க 
மஇகா எத்தனித்தபோது டான்ஶ்ரீ கேவியசுக்கும், மஇகாவுக்கும் இடையே பனிப்போர் மூண்டது. இந்த பனிப்போரின் உச்சக்கட்டமாக கேமரன் மலை தொகுதி மஇகாவுக்கே என தீர்மானித்த தேசிய முன்னணி தலைமைத்துவத்தின் அதிரடி முடிவால் உருகுலைந்த டான்ஶ்ரீ கேவியசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய கட்சி தலைமைத்துவ ‘அன்பர்கள்’ நம்பிக்கை துரோகிகளாக உருவெடுக்க துணிந்த நாடகமும் ஒருசேர அரங்கேறியது.

கேமரன் மலை தொகுதி கைவிட்டுப் போன நிலையில் ‘கேவியஸ் இனி அவ்வளவுதான். அவர் பின்னால் இருப்பதை தேமுவுக்கு விசுவாசியாய் மாறுவதே நமக்கு சிறப்பு’ என்ற சுயநலப்போக்கு சட்டப் போராட்டம் நடத்தி பிபிபி கட்சியை மீட்டெடுத்து அதற்கொரு அங்கீகாரமும் செல்வாக்கும் பெற்றுத் தந்த டான்ஶ்ரீ கேவியசையே கட்சியை நீக்கும் படலமாக விரிந்தது.

கட்சியை விட்டு நீக்குவதை விட நானே விலகிக் கொள்கிறேன் என தமது பதவி விலகல் கடிதத்தை அனுப்பியும்  அதை ஏற்க மறுத்த துரோக அணியினர், டான்ஶ்ரீ கேவியசை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்தனர்.

உனக்குள்ளே மிருகம் உறங்கிவிட நினைக்கும்; எழுந்து அது நடந்தால் எரிமலையே வெடிக்கும்’ என்ற பாடல் வரியை போல் தான் உருவாக்கிய கட்சியை தானே அவமதிக்க விரும்பவில்லை என்ற அவரின் அமைதியை பரிசோதிக்க நினைத்தவர்களுக்கு ‘புயல் காற்றாய்’ சுழன்று வீசினார்.

14ஆவது பொதுத் தேர்தலினால் போட்டியிடும் வாய்ப்பை இழந்து, பண மோசடி குற்றச்சாட்டுகளையும் எதிர்நோக்கியிருந்த போதிலும் ‘வீழ்ந்தாலும் மீண்டும் எழுவேன்’ என சொல்லி மீண்டும் சட்டப் போராட்டம் நடத்தி மைபிபிபி கட்சியை தன் வசமாக்கிக் கொண்டார்.
எந்து துரோகத்தில் வீழ்த்த நினைத்தார்களோ அந்த துரோகத்தையே தனது படிகற்களாக்கி  கட்சி உறுப்பினர்களின் பேராதரவோடு மீண்டும் மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவராக உயர்ந்தார். மைபிபிபியையும் பிபிபி என உருமாற்றினார்.

அரசியலில் எனும் ஆடுகளத்தில் ஆடும் புலியும் மோதிக் கொள்ளும். இதில் சில நேரங்களில் குள்ளநரிகளும் எட்டிப் பார்க்கும். ஆட்டை வேட்டையாடுபவன் வேட்டையன். புலியை துரத்தியடிப்பவன் சத்ரியன். குள்ளநரிகளை வீழ்த்துபவனே சாணக்கியன். அவ்வகையில்  ஆடு (மஇகா), புலியை (தேமு) காட்டிலும் தன்னை சுற்றியிருந்த குள்ளநரிகளை (துரோக அணியினர்) வீழ்த்தியதில்தான் உங்களின் அரசியல் சாணக்கியத்தனம் விடிவெள்ளியாய் போற்றப்படுகிறது.

இன்று பிறந்தநாளை கொண்டாடும் டான்ஶ்ரீ கேவியசுக்கு ‘பாரதம்’ இணைய ஊடகம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. #HBDTanSriKayveas

No comments:

Post a Comment