Thursday 25 July 2019

தமிழ் இடைநிலைப்பள்ளிக்கான ஆய்வுக்குழு அவசியமற்றது- முன்னாள் கல்வி அமைச்சர்

கோலாலம்பூர்-
தமிழ் இடைநிலைப்பள்ளி நிர்மாணிக்கப்படுவது தொடர்பில் செயற்குழு அமைப்படும் என்ற புத்ராஜெயாவின் முடிவு அவசியமற்றது என முன்னாள் கல்வி அமைச்சர் மட்ஸீர் காலிட் தெரிவித்தார்.

நாட்டில் தற்போதுள்ள தமிழ்ப்பள்ளி தொடக்க பள்ளிகளிலேயே மாணவர் எண்ணிக்கை குறைவாக இருக்கும்போது தமிழ் இடைநிலைப்பள்ளி அவசியம் இல்லாத ஒன்று.

இன ரீதியிலான பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கப்படும்போது அங்கு பிற இன மாணவர்களுடன் பழகுவதற்கான வாய்ப்புகள் இல்லாதபோது இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை எவ்வாறு மேம்படுத்த முடியும்?

இத்தகையை சூழல் படுமோசமான நிலைக்கு இட்டுச் செல்லும். இத்தகைய நடவடிக்கையினால் மலேசியாவில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை எவ்வாறு மேம்படுத்த முடியும்? தற்போதுள்ள பள்ளிகளே போதுமானது ஆகும் என்று அவர் மேலும் சொன்னார்.

செனட்டர் டத்தோ டி.மோகன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கல்வி துணை அமைச்சர் தியோ நி சிங், தமிழ் இடைநிலைப்பள்ளி நிர்மாணிப்பது தொடர்பில் செயற்குழு ஒன்று அமைக்கப்படும் என கூறியிருந்ததற்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment