Thursday 25 July 2019

இந்திய குடும்பத்தினரிடம் கொள்ளை; முகமூடி கொள்ளையர்களின் கைவரிசை

ஷா ஆலம்-
முகமூடி அணிந்த கொள்ளையர்கள் மூவர் ஓர் இந்திய குடும்பத்தினரை கத்தி முனையில் மிரட்டி கொள்ளையிட்டுச் சென்ற காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
ஷா ஆலம், தாமான் அலாம் மேகாவில் நேற்று 23ஆம் தேதி இரவு 9.40 மணியளவில் இந்திய குடும்பத்தினர் வரவேற்பரையில் உட்கார்ந்து கொண்டிருக்கும்போது திடீரென வீட்டிற்குள் நுழைந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள் அவர்களை மிரட்டி ஓர் அறையில் அடைத்து கொள்ளையிட முயற்சிக்கும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இன்று காலை தொடங்கி சமூக ஊடகங்களில் இந்த கொள்ளைச் சம்பவம்  வைரலாகிக் கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment