Wednesday 17 July 2019

ஹிண்ட்ராஃப் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுகிறார் வேதமூர்த்தி


ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
மலேசிய இந்தியர்களின் உரிமை போராட்டக் குரலாக அமைந்த ஹிண்ட்ராஃப் பேரியக்கத்தின் தலைமை பொறுப்பிலிருந்து விலகுவதாக ஒற்றுமை துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி அறிவித்துள்ளார்.
தற்போதைய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இந்தியர் பிரதிநிதிவம் இடம்பெறும் வகையில் மலேசிய  முன்னேற்றக் கட்சிக்கான விண்ணப்பத்தை தேசிய சங்கங்களின் பதிவிலாகா (ஆர்ஓஎஸ்) அங்கீகரித்துள்ளதால் இனி மலேசிய இந்தியர்களின் பிரதிநிதித்துவ கட்சியாக ஆளும் அரசாங்கத்தின் இக்கட்சி செயல்படும்.

புதிய அரசியல் கட்சிக்கு தலைமை பொறுப்பு ஏற்கவிருப்பதால் ஹிண்ட்ராஃப் இயக்கத்தில் தலைவர் பொறுப்பு உட்பட அனைத்து பதவிகளிலிருந்தும் விலகுவதாகவும் இதன் தொடர்பில் அவசர பொதுக் கூட்டம் நடத்தப்பட்டு ஹிண்ட்ராஃப் இயக்கத்தின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் பொன்.வேதமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment