Wednesday 24 July 2019

நீதிமன்ற வளாகத்தில் பிறந்தநாள் கொண்டாடினார் டத்தோஸ்ரீ நஜிப்

கோலாலம்பூர்-
1எம்டிபி ஊழல், அதிகார துஷ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்  இன்று தனது 66ஆவது பிறந்தநாளை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் கொண்டாடினார்.

இவ்வழக்குகளின் 42ஆவது நாள் விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்த நஜிப்பிற்கு ஆதரவாளர்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

இதற்கு முன்பு பல பிறந்தநாளை டத்தோஸ்ரீ நஜிப் கொண்டாடி இருந்தாலும் நீதிமன்ற வளாகத்தில் பிறந்நநாள் கொண்டாடியது  அவருக்கு மட்டுமல்ல அவரது ஆதரவாளர்களுக்கும் புதுமையாக இருந்திருக்கும்.

No comments:

Post a Comment