Wednesday 24 July 2019

பராமரிப்பு இல்லத்திலிருந்து வெளியேற 30 நாட்கள் கால அவகாசம்? சமூகத் தலைவர்கள் உதவுவார்களா? விஜயலெட்சுமி ஏக்கம்

காஜாங்-
காஜாங், தாமான் ஆசா ஜெயாவைச் சேர்ந்த தனித்து வாழும் மாது விஜயலெட்சுமி செல்லதுரை, ஆதரவற்ற முதியோரையும் குழந்தைகளையும்  பராமரிக்கும் இல்லம் ஒன்றை நடத்தி வருகிறார்.  

அரசாங்கத்தில் முறையாக பதிவு செய்து பராமரிக்கப்படும் இந்த இல்லத்தை சொந்த வருமானத்திலும் பொதுமக்களின் நன்கொடையிலும் வழிநடத்தி வருவதாக கூறும் அவர், இந்த இல்லத்தை நடத்துவதற்கு அனுமதி இல்லை,  30 நாட்களுக்குள் இந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று காஜாங் நகராண்மைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

முறையான பதவி சான்றிதழை வைத்துள்ளேன், ஏன் இந்த இல்லத்தை நடத்தக்கூடாது  என கேள்வி எழுப்பிய அவர், 25க்கும் மேற்பட்ட முதியோரும் குழந்தைகளும்  உள்ள நிலையில் திடீரென வெளியேறச் சொன்னால் எங்கோ போவோம்?

இந்த இல்லத்திற்கான வெ.1,000 கூட சொந்த செலவிலேயே  செலுத்துகிறேன். அரசாங்க உதவிகள் ஏதுமின்றி நல்லுள்ளங்களின் உதவியாலும் இந்த இல்லத்தை நடத்தி வருகிறேன்.

முறையாக பதிவு பெற்று செயல்படும் என்னுடைய முதியோர் பராமரிப்பு இல்லத்தை அனுமதி இல்லையா? 30 நாட்கள் காலக்கெடு வழங்கப்பட்டுள்ள நிலையில் தமக்கு உதவ சமூகத் தலைவர்கள் முன்வருவார்களா? என்று விஜயலெட்சுமி வினவினார்.

No comments:

Post a Comment