Thursday 11 July 2019

12 வயது சிறுமியுடன் பாலியல் உறவு; ஆசாமி கைது

சிரம்பான் -
வயது குறைந்த சிறுமியுடன் பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட ஆடவனை போலீசார் கைது செய்தனர்  .

வடக்கு- தெற்கு நெடுஞ்சாலையில் பேரா, கோப்பெங் அருகே 65 வயது மதிக்கத்தக்க லோரி ஓட்டுனரான அவ்வாடவனை போலீசார் கைது செய்ததாக சிரம்பான் மாநில குற்றவியல் விசாரணை பிரிவுத் தலைவர் வான் ருக்மான் தெரிவித்தார்.

12 வயதே நிரம்பிய சிறுமியை காரில் பாலியல் வல்லுறவில் அவ்வாடவன் ஈடுபடச் செய்யும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட சிறுமியின் தாயார் செய்த புகாரின் அடிப்படையில் அவ்வாடவன் கைது செய்யப்பட்டான்.

சம்பந்தப்பட்ட ஆடவன் அச்சிறுமியி குடும்பத்தினருகு சில மாதங்களுக்கு முன்புதான் அறிமுகம் ஆனவர் என்றும் சிறுமியின் குடும்பத்தினர் யாரும் வீட்டில் இல்லாத சமயத்தில்  எழுதுகோல், உணவு வாங்கி தருவதாக கூறி சிறுமியுடன் பாலியல் வல்லுறவில் அவ்வாடவன் ஈடுபட்டுள்ளான்.

அச்சிறுமியுடன் மூன்று அவ்வாடவன் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளான் என்றும் ஆக கடைசியாக ஜூன் மாதத்தில் அச்சிறுமியை பட்டணத்திற்கு அழைத்துச் சென்று வாகன நிறுத்துமிடத்தில் அநாகரீகச் செயலில் ஈடுபட்டுள்ளான் என்றும் அவர் சொன்னார்.

இவ்விவகாரம் செக்‌ஷன் 10, 2017 சிறார் பாலியல் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 10 ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment