Tuesday 30 July 2019

பிரதமர் பதவியில் துன் மகாதீர்; ஒரு தவணைக்கு நீடிக்க வேண்டும்- அஸ்மின் அலி

புத்ராஜெயா-
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அரசாங்கத்தின் முழு தவணைக்கும் துன் மகாதீர் முகமட் பிரதமராக நீடிக்க வேண்டும் என்று பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி அறிக்கை விடுத்துள்ளார்.
நாட்டை சிறந்த முறையில் நிர்வகிக்கவும் நிலைத்தன்மையான ஆட்சியமைப்பை கட்டமைக்கவும் இந்த ஐந்தாண்டுகால தவணைக்கும் துன் மகாதீரே பிரதமராக நீடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அதோடு, துன் மகாதீர் பதவி நீட்டிப்புக்கு பாஸ், அம்னோ கட்சிகள் வழங்கியுள்ள ஆதரவையும் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி வரவேற்றுள்ளார்.

பிரதமர் பதவியில்  துன் மகாதீர் 2 ஆண்டுகளுக்கு மட்டுமே நீட்டிப்பார் எனவும் அதன் பிறகு 
பிரதமர் பதவி டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் வழங்கப்படும் என்று 14ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்பு பக்காத்தான் ஹராப்பான் மன்றத்தில் முடிவெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment