Wednesday 29 May 2019

பேராக் ஆட்சிக்குழுவில் இடம்பெறுகிறாரா முகமட் அராஃபாட்?

ரா.தங்கமணி


ஈப்போ-
பேரா மாநில ஆட்சிக்குழுவில் அதிரடி மாற்றம் நிகழக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் புதிய ஆட்சிக்குழுவில் உலு கிந்தா சட்டமன்ற உறுப்பினர் முகமட் அராஃபாட் இடம்பெறுவார் என நம்பப்படுகிறது.
அண்மையில் பேரா மாநில ஆட்சிக்குழுவில் அதிரடி மாற்றங்கள் நிகழ்த்தப்படக்கூடும் என்ற பேச்சு பரவலாக எழுந்த நிலையில் தற்போது ஆட்சிக்குழுவில் இடம்பெற்றுள்ள அப்துல் அஸிஸ் பாரி, அப்துல் யுனுஸ் ஜமாரி ஆகியோர் நீக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

அவ்வாறு ஆட்சிக்குழு சீரமைக்கப்படும் வேளையில் முகமட் அராஃபாட் புதிய ஆட்சிக்குழுவில் இடம்பெறக்கூடும் என நம்பப்படுகிறது.

நோன்புப் பெருநாளுக்குப் பின்னர் ஆட்சிக்குழுவை மாநில மந்திரி பெசார் முகமட் அஹ்மாட் பைசால் மாற்றியமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment