Saturday 11 May 2019

நஜிப், ரோஸ்மாவின் விருதுகளை மீட்டுக் கொண்டது சிலாங்கூர் அரண்மனை

கோலாலம்பூர்-

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப், அவரின் துணைவியார் டத்தின்ஶ்ரீ ரோஸ்மா மன்சோர் ஆகியோரின் விருதுகளை சிலாங்கூர் அரண்மனை  மீட்டுக் கொண்டது.

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்ற வழக்கை இவ்விருவரும் எதிர்கொண்டிருப்பதால் விருதுகள் மீட்டுக் கொள்ளப்படுவதாக சிலாங்கூர் மாநில செயலாளர் டத்தோ முகமட் அமின் அஹ்மாட் அஹ்யா தெரிவித்தார்.

நஜிப்புக்கு வழங்கப்பட்ட ‘டத்தோஶ்ரீ’ விருதும் ரோஸ்மாவுக்கு வழங்கப்பட்ட ‘டத்தின் படுக்கா ஶ்ரீ’ விருதும்  மே 6ஆம் தேதி மீட்டுக் கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.

No comments:

Post a Comment