Friday 17 May 2019

பத்துமலை திருத்தலம் உட்பட 3 ஆலயங்களுக்கு பயங்கரவாத மிரட்டல்; பாதுகாப்பு தீவிரம்

கோலாலம்பூர்-

பத்துமலை ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயம் உட்பட 3 ஆலயங்களுக்கு பயங்கரவாத மிரட்டல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவ்வாலயங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் 4 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதன் விளைவாக இந்து வழிபாட்டு தலங்களின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது தெரிய வந்தது.

சீபில்ட் ஆலய கலவரத்தின்போது தீயணைப்பு வீரர் முகமட் அடிப் தாக்கப்பட்டு உயிரிழந்ததற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக வழிபாட்டுத் தலங்கள் உட்பட சில பிரமுகர்களையும் படுகொலை செய்ய திட்டமிட்டதாக நான்கு ஆடவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து, பத்துமலை திருத்தலம், ஜாலான் துன் எச்.எஸ்.லீ. ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், கோர்ட்டுமலை பிள்ளையார் கோயில் ஆகியவற்றில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆலயத்திற்கு வருபவர்களின் கைப்பைகள் முழுமையாக பரிசோதிக்கப்படுகிறது.  ஆலயத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

No comments:

Post a Comment