Friday 24 May 2019

ஆற்றில் விழுந்த ஷாலினியின் சடலம் மீட்பு


தெலுக் இந்தான்-
கடந்த 3 நாட்களுக்கு முன்பு பாசீர் பூத்தே, பிஞ்சி ஆற்றில் தவறி விழுந்த இளம்பெண் வி.ஷாலினியின் சடலம் சம்பவ இடத்திலிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் தெலுக் இந்தான், ஜெத்தி கம்போங் பஹாகியாவில் கண்டெடுக்கப்பட்டது.
இன்று காலை 6.05 மணியளவில் பொது மக்கள் கொடுத்த தகவலின்பேரில் அப்பகுதிக்கு விரைந்த தீயணைப்பு, மீட்புப் படையினர் சடலத்தை கைப்பற்றினர்.

கடந்த 20ஆம் தேதி வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த ஷாலினி, ஒரு விபத்தில் சிக்கிய பின்பு நிலைதடுமாறி பாசீர் பூத்தே, பிஞ்சி ஆற்றில் விழுந்தார்.

கைப்பற்றப்பட்ட ஷாலினியின் சடலம் சவப்பரிசோதனைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தீயணைப்புப் பேச்சாளர் கூறினார்.

No comments:

Post a Comment