Wednesday 29 May 2019

சட்டவிரோதமான கழிவுகள் இறக்குமதி; சொந்த நாடுகளுக்கு திரும்ப அனுப்பப்படும்

போர்ட்கிள்ளான் -

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள 60 கொள்கலனில் உள்ள குப்பைகள்  அந்தந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படும் என்று  எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் ,காலநிலை மாற்றம் அமைச்சர் இயோ பீ யின் தெரிவித்தார்.

கிள்ளான் துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த 60 கொள்கலன்களும் கண்டறியப்பட்டதாகவும் இதில் 450 மெட்ரிக் டன் அடங்கிய 10 கொள்கலன்கள் சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், கனடா, சவுதி அரேபியா, வங்காளதேசம், ஐக்கிய சிற்றரசு, ஆகிய நாடுகளைச் சேர்ந்ததாகும்.

இன்று கிள்ளான் துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 123 கொள்கலன்களில் 
சோதனை செய்யப்பட்டது. சட்டவிரோதமான முறையில் கழிவுப் பொருட்கள் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

450 மெட்ரிக் டன் அடங்கிய 10 கொள்கலன்களை இன்னும் 14 நாட்களுக்குள் தத்தம் நாடுகளுக்கு அனுப்ப வேண்டிம் என்று அதனை இறக்குமதி செய்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளின் குப்பைகளை கொட்டுவதற்கு மலேசியா ‘குப்பை நாடல்ல’. குப்பைகளை யார் இங்கு அனுப்பினாலும் திரும்ப நாங்கள் அனுப்புவோம். அதில் மிக உறுதியாக உள்ளோம். மிகச் சிறிய நாடாக இருந்தாலும் அதனை எதிர்த்து போராடுவோம். வளர்ந்த நாடுகள் எங்களை அவமதிக்க விடமாட்டோம். சட்டவிரோதமான முறையில் இங்கு கழிவுகளை  இறக்குமதி செய்யும் தரப்பினர் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

No comments:

Post a Comment