Tuesday 7 May 2019

பூச்சோங் நாடாளுமன்றத் தொகுதி ஏற்பாட்டில் உடற்குறையுடையோர், முதியோருக்கு நிதியுதவி


எஸ்.ஷாண்

பூச்சோங்-
உடற்பேறு குறைந்தவர்கள், நோயால் பாதிக்கப்பட்ட முதியோர்கள், பிள்ளைகளால் கைவிட்டப்பட்ட வயதான பெற்றோர்கள் ஆகியோருக்கு பூச்சோங் நாடாளுமன்றத் தொகுதி சார்பில் 14 பேருக்கு தலா 1,000 வெள்ளி (ஒருவருக்கு மட்டும் 500 வெள்ளி) நன்கொடை வழங்கப்பட்டது.

பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர், தொடர்பு,பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் தலைமையில் இந்நிதி கிடைக்கப்பெற்றது என்று அதன் ஏற்பாட்டாளர் மெலிசா கூறினார்.
அதுமட்டுமின்றி இத்தகைய சூழலில் பாதிக்கப்பட்டு வரும் பூச்சோங், செர்டாங் தொகுதியில் நன்கொடை கிடைக்காத மக்களுக்கு 14ஆவது மைல், செர்டாங் இக்கியூன் பார்க் உள்ள நாடாளுமன்றத் தொகுதி அலுவலகத்திற்கு வந்து பதிவு செய்து கொள்ளலாம் என பத்திரிகையாளர் கூட்டத்தில் அவர் சொன்னார்.

இதற்கு மாண்புமிகு செனட்டர் சுரேஷ் சிங் முழு ஆதரவு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment