Friday 17 May 2019

பிடிபிடிஎன் கடனாளிகளுக்கு பயணத் தடையா? மக்கள் நிராகரிப்பர்- டத்தோஶ்ரீ அன்வார்

பாங்கி-

பிடிபிடிஎன் கடனாளிகள் வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கும் பரிந்துரையை மக்கள் நிச்சயம் நிராகரிப்பர் என்று டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

பிடிபிடிஎன் கடனை திரும்பச் செலுத்தாதவர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான புத்ராஜெயா கொண்டு வரும் இந்த பரிந்துரையை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

கடனுதவி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. இதில் அழுத்தம் கொடுக்கலாமா? என்று அவர் சொன்னார்.

பிடிபிடிஎன் கடனை திருப்பி செலுத்துவதற்கு ஏதுவான இலகுவான நடைமுறையை அமல்படுத்தலேமே என்ற மக்களின் கருத்து மதிப்பளிக்கப்பட வேண்டும் என்று போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment