Tuesday 14 May 2019

புதிய துணை ஐஜிபி-ஆக டத்தோ மஸ்லான் நியமனம்

புத்ராஜெயா-

புக்கிட் அமான் வர்த்தக, குற்றப்புலனாய்வு பிரிவின் இயகுனராக பணியாற்றி வந்த டத்தோ மஸ்லான் புதிய துணை ஐஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் 17ஆம் தேதி பணி ஓய்வு பெற்ற டான்ஶ்ரீ நோர் ரஷீட்டுக்கு பதிலாக இவரின் நியமன அமைந்துள்ளது.

மே 9ஆம் தேதி முதல் டத்தோ மஸ்லானின் பணி நியமனம் நடப்புக்கு வந்துள்ளது.

அவருக்கான பணி நியமனக் கடிதத்தை உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் இன்று நடைபெற்ற சிறப்பு நிகழ்வொன்றில் வழங்கினார்.


No comments:

Post a Comment