Monday 28 August 2017

‘ராகாவின் ஸ்டார்’வெற்றி மகுடத்தை வென்றார் திவேஸ்


ராகாவின் ஸ்டார்இறுதிச் சுற்றில் திவேஸ் தியாகராஜா முதல் நிலை வெற்றியாளராக வாகை சூடினார்.

இந்த இறுதிச் சுற்றில் அருள்வேந்தன் மனோகரன், நிமலன் கிருஷ்ணன், சபேஷ் மன்மதன், அணு ரஞ்சினி அன்பழகன் மற்றும் திவேஸ் தியாகராஜா ஆகியோர் களமிறங்கினார்கள்.

இந்த 5 போட்டியாளர்களும், 5 மலேசிய உள்ளூர் இசையமைப்பாளர்களுடன் இணைந்து 5 நாட்களில் ஒரு பாடலை உருவாக்கும் பணி வழங்கப்பட்டது. அந்த வகையில் ஜெய், லாரன்ஸ் சூசை, டி.ஜே. கன், சுந்தரா மற்றும் ஜித்திஸ் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட போட்டியாளருடன் இணைந்து பணியாற்றினார்கள்.

இசையமைப்பாளர்களின் இசையில் உருவாக்கப்பட்ட அந்த பாடலைப் போட்டியாளர்கள் இறுதிச் சுற்றில் பாடினார்கள். 


சவால்மிக்க இப்போட்டியின் இறுதியில் திவேஸ் முதல் நிலை வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இரண்டாம் நிலை வெற்றியாளரான சபேஷ் ரிம 2,000 ரொக்கமும் மூன்றாம் நிலை வெற்றியாளரான நிமலன் ரிம 1,000 ரொக்கத்தையும் தட்டிச் சென்றார்கள்.

அதை வேளையில், இறுதிச் சுற்றுக்குத் தகுதிப் பெறும் முதல் 5  போட்டியாளர்கள் எதிர்வரும் செப்டம்பர் 24-ஆம் தேதி  ஜிஎம் கிள்ளான் வளாகத்தில் நடைபெறவுள்ள ஆஸ்ட்ரோவின் அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டத்தில் டி.எச்.ஆர் ராகா கலை நிகழ்ச்சியில் பாடவுள்ளார்கள்.




இந்த மாபெரும் இறுதிச் சுற்றின் நீதிபதிகளாக நம் நாட்டின் புகழ்பெற்ற பாடகர்கள் பிரீதா பிரசாத், சித்தார்த்தன் மற்றும் டி.எச்.ஆர் ராகாவின் அறிவிப்பாளர் ஆனந்தா பணியாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியை டி.எச்.ஆர் ராகாவின் அறிவிப்பாளர்கள் உதயா, ராம், ரேவதி, கவிமாறன், சுரேஷ், அகிலா, ஷாலு, ஜெய் மற்றும் யாசினி மிகச் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்கள். 

மேலும், இப்போட்டியின் இறுதிச் சுற்று டி.எச்.ஆர். ராகா வானொலியின் முகநூல் வாயிலாக நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment