Thursday 10 August 2017
பெண்களை இழிவாக விமர்சிக்க வேண்டாம் - ரசிகர்களுக்கு விஜய் அறிவுறுத்து
சென்னை:
அனைவரும் பெண்மையை போற்ற வேண்டும். பெண்கள் மீதான தவறான கருத்துகள் இணையதளங்களில் வெளியிட வேண்டாம் என நடிகர் விஜய் தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டார்.
பெங்களூரைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன்கொடுத்த புகாரின் பேரில் சென்னை போலீசார் விஜய் ரசிகர்கள் இருவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சமுதாயத்தில் பெண்களை அதிகம் மதிப்பவன் நான். யாருடைய திரைப்படத்தையும் யாரும் விமர்சிப்பதற்கு கருத்து சுதந்திரம் உண்டு. எக்காரணம் கொண்டும், எந்த நேரத்திலும் பெண்களை இழிவாகவோ, தரக்குறைவாகவோ விமர்சிக்கக்கூடாது என்பது எனது கருத்தாகும்.
அனைவரும் பெண்மையைப் போற்ற வேண்டும். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் சமூக இணையதளங்களில் பெண்கள் மீது தவறான கருத்துகளை வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment