Friday 30 April 2021

மஇகா எதிர்க்கட்சியாக இருந்தபோது கட்சியை காப்பாற்ற வந்தவர்கள் விக்னேஸ்வரன், சரவணன் - சின்னராஜு

லிங்கா-

சுங்கை சிப்புட்-

இந்திய சமுதாயத்தின் உருமாற்றத்திற்கும் மஇகாவின் வளர்ச்சிக்கும் மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனின் தலைமைத்துவம் தொடரப்பட வேண்டும் என்று மஇகா ஶ்ரீ தாமான் கிளைத் தலைவர் வீ.சின்னராஜு குறிப்பிட்டார்.

2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ம இகாவின் தலைவராக டான்ஶ்ரீ விக்னேஸ்வரனும் துணைத் தலைவராக டத்தோஶ்ரீ எம்.சரவணனும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

தேசிய முன்னணி ஆளும் அதிகாரத்தை இழந்து ஓர் எதிர்க்கட்சி எனும் நிலையில் இருந்த மஇகாவை வலுபடுத்த டான்ஶ்ரீ விக்னேஸ்வரனும் டத்தோஶ்ரீ சரவணனும் துணிந்து களமிறங்கினர்.

அதற்கேற்ப மஇகாவை இன்று வலுவான கட்சியாக மாற்றியமைத்துள்ள டான்ஶ்ரீ விக்னேஸ்வரனின் தலைமைத்துவம் தொடரப்பட வேண்டும் என்ற நிலையில் கட்சி தேர்தலில் தேசியத் தலைவராக டான்ஶ்ரீ விக்னேஸ்வரனும் துணைத் தலைவராக டத்தோஶ்ரீ சரவணனும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கிளைக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அவர் சொன்னார்.

அதோடு, கிளை உறுப்பினர்களின் திருமணம், பிறந்தநாளின்போது அவர்களின் இல்லம் சென்று பரிசு, வாழ்த்து அட்டை வழங்குவது, கிளை உறுப்பினர்களின் பெற்றோர் அல்லது பிள்ளைகள் மரணித்தால் மரண சகாய நிதி வழங்குவது போன்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

மஇகா ஶ்ரீ தாமான் கிளையின் முதலாம் ஆண்டு கூட்டத்தை தொகுதி சார்பாக வின்சென்ட் டேவிட்,தேசிய மஇகா சார்பாக உச்சமன்ற உறுப்பினர் குணசீலன் ஆகியோர் வழிநடத்தினர்.


No comments:

Post a Comment