Sunday 18 April 2021

ஏரா சூரியா அறவாரியத்தின் ஏற்பாட்டில் நலிவடைந்த குடும்பங்களுக்கு உதவி

ரா.தங்கமணி 

உலு சிலாங்கூர்-

ஏரா சூரியா அறவாரியத்தின் ஏற்பாட்டில் நலிவடைந்த குடும்பங்களுக்கு உதவிப் பொருட்கள் அண்மையில் வழங்கப்பட்டன. 

புக்கிட் தாகார், 2ஆவது டிவிஷனில் வசித்து வரும் மூன்று குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள் உட்பட அக்குடும்பத்தில் உள்ள பள்ளி செல்லும் மாணவர்களுக்கு பள்ளி உபகரணப் பொருட்களும் புத்தாடைகளும் வழங்கப்பட்டன. 

இது குறித்து பேசிய ஏரா சூரியா அறவாரியத்தின் தலைவர் நந்தகுமார், அறவாரியம் தோற்றுவிக்கப்பட்டு 4 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் பல இன மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறோம். 

இனம், சமயம் சார்ந்திடாமல் அனைத்து இன மக்களையும் அரவணைத்துச் செல்லும் நோக்கில் அறவாரியம் முழு மூச்சாக செயல்படுகிறது. 

இங்கு புக்கிட் தாகரில் உள்ள மூன்று குடும்பத்தினருக்கு உதவிகள் தேவைப்படுவதாக கோரிக்கை வந்தது. 

அதன் அடிப்படையில் இந்த மூன்று குடும்பங்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன என்று அவர் சொன்னார். 

இந்நிகழ்வின் போது உதவிப் பொருட்களை மட்டும் வழங்கிடாமல் அவர்களின் குறைகளையும் பிற பிரச்சினைகளையும் கேட்டு தெரிந்து கொண்டதாக அவர் சொன்னார். 

உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் நந்தகுமாருடன் அறவாரியத்தின் இயக்குனர் தோனி கிளிஃபர்ட்,  செயலாளர் ஃபரிடா ஆகியோரும் உடன் வந்திருந்தனர்.

No comments:

Post a Comment