Saturday 10 April 2021

மஇகா தேமுவில் தான் உள்ளது- டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

லிங்கா 

சுங்கை சிப்புட்-

மஇகா  இன்னமும் தேசிய முன்னணியில் தான் தொடர்ந்து இருக்கிறது என்று அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கூறினார்.

நேற்று சுங்கை சிப்புட் ம.இ.கா. தொகுதி அலுவலகத்தில் பேறு குறைந்தவர்களுக்கும் மாணவர்களுக்கும் நிதியுதவிக்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு சொன்னார்.

ம.இ.கா. மாநாட்டை  மலேசியப் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் திறந்துவைத்தது தொடர்பில் பல ஊகங்கள் எழுந்துள்ளன.  பொதுவாக ம.இ.கா. பேராளர் மாநாட்டுக்கு பிரதமரை அழைப்பது வழக்கம். மேலும், இந்தியர்களின் பிரச்சினைகள் குறித்து பிரதமர் என்ன திட்டங்கள் வைத்துள்ளார் என்பதை அறிந்துகொள்ள இது ஒரு வாய்ப்பாகவும்  அமையும்.

தவிர, ம.இ.கா. வுக்கு ஓர் அமைச்சர் பதவியும் பிரதமர் வழங்கியுள்ளார். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் அவரை மாநாட்டுக்கு அழைத்தோம். எனவே, தேசிய முன்னணியில் ம.இ.கா. தொடர்வதில் எந்தச் சிக்கலும் இல்லை என்றும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெளிவுபடுத்தினார்.

நேற்று பாடாங் ரெங்காஸில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ நாஸ்ரி அஜிஸ், ம.இ.கா. தேசிய முன்னணியில் தொடர்ந்து இருப்பதில் மகிழ்ச்சியே. எனினும், அவர்கள் வெளியேற முடிவு செய்தாலும் அம்னோ தனித்து நின்று வெற்றிபெறும் ஆற்றலைப் பெற்றுள்ளது என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment