Thursday 8 April 2021

மஇகாவுக்கு மாற்றாக மலேசிய மக்கள் சக்தி கட்சி- டத்தோஶ்ரீ தனேந்திரன் நம்பிக்கை

கோலாலம்பூர்-

வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி கூட்டணியில் இந்திய சமுதாயத்தின் குரலாக மலேசிய மக்கள் சக்தி கட்சி விளங்க முடியும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்,தனேந்திரன் தெரிவித்தார்.

60 ஆண்டுகால தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சியாக விளங்கி வரும் மஇகாவின் இடத்தை எங்களால் நிரப்ப முடியும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இணையும் மஇகாவின்  முடிவை  நாங்கள் தடுக்க முடியாது. அதே வேளையில் இதில் எங்களுக்கு பொறாமை ஏதும் இல்லை.

தேசிய முன்னணிக்கு விசுவாசமாக இருந்து வரும் மலேசிய மக்கள் சக்தி கட்சி, எந்தவொரு சூழலிலும் விலகிட மாட்டோம் என்று கூறிய டத்தோஶ்ரீ தனேந்திரன், மஇகாவின் இடத்தை முழுமையாக பூர்த்தி செய்து விடுவோமா என்பது தெரியவில்லை, ஆனால் இந்திய சமுதாயத்தின் குரலாக தேமு கூட்டணியில் நிச்சயம் விளங்கும்வோம் எனறு அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

No comments:

Post a Comment