Thursday 28 May 2020

குடிபோதையில் வாகனங்களை செலுத்துவதா? சட்டங்களை கடுமையாக்குக- வீரன்

ரா.தங்கமணி

தைப்பிங்-
குடிபோதையில் வாகனங்களை செலுத்தி விபத்துகளை ஏற்படுத்தும் வாகனமோட்டிகளுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்குவதற்கு நடப்பிலுள்ள சட்டம் திருத்தம் செய்யப்பட வேண்டு என்று மஇகா மத்திய செயலவை உறுப்பினர் எம்.வீரன் வலியுறுத்தினார்.
குடிபோதையில் வாகனங்களை செலுத்தி விபத்தை ஏற்படுத்துவதோடு அதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதும் அண்மைய காலமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

இத்தகைய போக்கு மலேசியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதோடு குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை பெரும்பாலான வாகனமோட்டிகள் தவிர்க்கும் வகையில் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்.

இப்போது அமலில் இருக்கும் சட்டத்தை வாகனமோட்டிகள் பெரிதாக கருதாததாலேயே இவ்விபத்துகள் நிகழ்கின்றன.

அதனை தவிர்ப்பதற்கு நடப்பிலுள்ள சட்டம் திருத்தம் செய்யப்பட்டு கடுமையான விதிமுறைகளை உள்ளடக்கிய சட்டத்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று தைப்பிங் மாநகர் மன்ற உறுப்பினருமான வீரன் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment