Tuesday 5 May 2020

பிபிகேபி- அடகுகடைகளில் அணிதி்ரண்ட மக்கள

பெட்டாலிங் ஜெயா-
கோவிட்-19 வைரஸ் பரவலால் அமல்படுத்தப்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையில் (எம்சிஓ) சில தளர்வுகளை அரசாங்கம் வழங்கிய பின்னர் மீண்டும் செயல்பட தொடங்கிய அடகுகடைகளில் மக்கள் அணி திரண்டனர்.
எம்சிஓ காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள நேரிட்டது.

இன்று முதல் தொழில், வணிக நிறுவனங்கள் செயல்படலாம் என்று அரசாங்கம் அறிவித்ததால் அடகுகடைகள் செயல்பட தொடங்கியது தங்களது நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில் மக்கள் நகைகளை அடகு வைத்து பணம் ஈட்ட அணி திரண்டனர்.

மலாக்காவிலும் பெட்டாலிங் ஜெயாவிலும் மக்கள் அடகுகடைகள் முன்பு திரண்ட புகைப்படம், காணொளி காட்சிகள் சமூக வலைதலங்களில் வைரலாகின.

உலக மக்களை பீதிக்கு ஆளாக்கி வரும் கோவிட்- 19 மக்களை மருத்துவமனைக்கும் கல்லறைக்கும் அனுப்பி வைத்துக் கொண்டிருந்தது என நினைத்தால் இப்போது அடகுகடை முன்பும் நிற்கவைத்துள்ளது.

கோவிட்-19 இன்னும் என்னென்ன சம்பவங்களை அரங்கேற்ற காத்துக் கொண்டிருக்கிறதோ?

No comments:

Post a Comment