Saturday 23 May 2020

கோவிட்-19: தனிமைபடுத்தப்பட்டார் பிரதமர்

புத்ராஜெயா-
பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப் பட்டுள்ளார் என்று பிரதமர் துறை இலாகா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரி ஒருவருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இன்று தொடங்கி 14 நாட்களுக்கு அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

ஆயினும் இன்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கோவிட்-19 தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment