Sunday 3 May 2020

கோவிட்-19: 16 நாட்களுக்குப் பின்னர் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 105ஆக அதிகரிப்பு

கோலாலம்பூர்-
கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16 நாட்களுக்குப் பின்னர் 100க்கும் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக 100க்கும் குறைவானோர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று அவ்வெண்ணிக்கை 105ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் தெரிவித்தார்.

இதில் 94 பேர் உள்நாட்டவர்கள் என்றும் எஞ்சிய 11 பேர் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டவர்கள் என்றும் அவர் சொன்னார்.

புதிதாக மரணச் சம்பவங்கள் எதுவும் பதிவு செய்யாத நிலையில் மரண எண்ணிக்கை 103ஆக உள்ளது.

மே 4ஆம் தேதி தொடக்கம் தொழில்துறைகள் மீண்டும் வழக்கம்போல் செயல்படலாம் என்று பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் அறிவித்த இரு நாட்களுக்குள்ளே வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment