Sunday 31 May 2020

9ஆவது பிரதமராக டத்தோஶ்ரீ அன்வார்- மலேசிய இந்தியர் குரல் ஆதரவு

ரா.தங்கமணி

கோலாலம்பூர்- 
சுயநலவாதிகளிடமிருந்து மலேசியாவை காப்பாற்றிடவும் சிறந்த முறையில் நாட்டை  வழிநடத்திடவும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாட்டின் 9ஆவது பிரதமராக பதவியேற்பதை ஆதரிப்பதாக  இந்தியர்களின் பேரெழுச்சி பேரியக்கம் ஹிண்ட்ராஃப்பின் மறு அவதாரமான மலேசிய இந்தியர் குரல் (Malaiysia Indian Voice -MIV)  வலியுறுத்தியுள்ளது.

உருமாற்றப் பாதையில் நாட்டை  வழிநடத்திச் செல்லும் பக்காத்தான் ஹராப்பானின் முதன்மை நோக்கங்களை பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் செயல்படுத்துவார் என்பதன் அடிப்படையில் ஆதரவு தெரிவிப்பதாக அதன் பொதுச் செயலாளர் ஆனந்தன் ராமையா வலியிறுத்தினார்.

அன்வார் இப்ராஹிம்  அரசியல் அடிச்சுவற்றில் தனியொரு அடையாளத்தை கொண்ட தலைவராக திகழ்கின்றார். உலக அரங்கில் நன்கு அறியப்பட்ட தலைவராக திகழும் இவர்,  அதிகார மீறலுக்கு நடுவே துணைப் பிரதமர் உட்பட பல்வேறு உயரிய் பதவிகளை வகித்த போதிலும் சிறையில் தள்ளப்பட்டு அடி, உதை என அவமானப்படுத்தப்பட்டு பல்வேறு  கொடுமைகளையும் அனுபவித்துள்ளார்.  அவர் பட்ட வேதனைகளுக்கும் வலிகளுக்கும் அளவுகோல் கிடையாது. அவர் சிந்திய கண்ணீர், வியர்வை, ரத்தம் ஆகியவற்றை சிந்தியே இன்னமும் அரசியல் களத்தில் போராடி கொண்டிருக்கிறார்.
ராய்டு

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலின்போது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தலைவர்கள் ஒப்புக் கொண்டதை போல நாட்டின் பிரதமராக அன்வார் இப்ராஹிம் பதவியேற்பதையே தாங்கள் விரும்புவதாக  ஆனந்தன் தெரிவித்தார்.

மேலும், ஜனநாயக சித்தாந்த்தில் நாட்டை சிறப்பாக ஆட்சி புரிந்திட டத்தோஸ்ரீ அன்வாரே தகுதி வாய்ந்தவர் என்ற நம்பிக்கை கொள்வதாக அதன் ஆலோசகர் ராய்டு தெரிவித்தார்.

2007ஆம் ஆண்டு ஹிண்ட்ராஃப் போராட்டவாதிகள் 5 பேர் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் (இசா) கைது செய்யப்பட்டபோது அதற்கெதிராக மனித உரிமை நசுக்கப்படுவதாக முதல் குரல் எழுப்பியவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தான்.

இந்நிலையில்  சீர்திருத்தப் போராட்டத்தின் இலட்சியவாதத்தைத் தொடரவும், பக்காத்தான் ஹராப்பனின் (பி.எச்) தூணாகவும் இருக்க அன்வாருக்கு  வலுவான ஆதரவை வெளீபடுத்துவது காலத்தின் கட்டாயம் ஆகும்.

பெரும் சவாலாக அமைந்துள்ள நாட்டின் அரசியல் போர்க்களம்  ஒரு போராளியாக நிற்கின்ற அவரின் போராட்டத்திற்கு நமது கரங்களை ஒன்றிணைப்போம் என்று அவர்ர் சொன்னார்.

அதோடு,  14ஆவது பொதுத் தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்திய மக்கள் விரும்பியது டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக பதவியேற்பதான்.  அதனால்தான் துன் மகாதீருக்கு பிறகு அன்வார்தான் பிரதமர்  என்ற கூட்டணி ஒப்பந்தத்தை மக்கள் நம்பி பக்காத்தான் ஹராப்பானை வெற்றி பெறச் செய்தனர் என்று மலேசிய இந்தியர் குரலின் சிலாங்கூர் மாநிலத் தலைவர் மணிமாறன் வலியுறுத்தினார்.

ஈராண்டுகால ஒப்பந்தம் முறையாக கடைபிடிக்கப்பட்டிருந்தால் இந்நேரம் அன்வார் இப்ராஹிம் பிரதமராக பதவியேற்றிருப்பார். ஆனால் அரசியல் சதிராட்டத்தில் இப்போது வீழ்த்தப்பட்டிருக்கிறார்.

போராட்டக் களம் அவருக்கு புதியதல்ல. துரோகிகளின் சூழச்சியை வென்று 9ஆவது பிரதமராக டத்தோஶ்ரீ அன்வார் பதவியேற்பதற்கு சிலாங்கூர் மாநில மலேசிய இந்தியர் குரல் உறுதுணையாக இருக்கும் என்று அவர் மேலும் சொன்னார்.

No comments:

Post a Comment