Saturday 9 May 2020

கோவிட்-19; கல்லூரி மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டினார் டத்தோ ஏகே தேவராஜ்

ஷா ஆலம்-
கோவிட்-19 வைரஸ் தொற்றால் கல்லூரி விடுதியிலேயே தங்க நேர்ந்த மாணவர்களுக்குத் தொழில் அதிபர் மற்றும் சமூகச் சேவகர் டத்தோ ஏகே தேவராஜ் வேல் உணவுப் பொட்டலங்களை வழங்கி உதவினார்.
நாட்டில் அமல்படுத்தப்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையினால் ஷா ஆலம் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் விஸ் மெக்காட்ரோனிக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் தங்களது வீடுகளுக்குச் திரும்ப முடியாமல் கல்லூரியிலேயே தங்கினர்.

இம்மாணவர்கள் எதிர்நோக்கிய போதிய உணவுப் பற்றாக்குறையை தீர்க்கும் நோக்கில் இம்மாணவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள வழங்கி உதவினார்.

No comments:

Post a Comment