Sunday 3 May 2020

விஷப் பரீட்சையில் களமிறங்குகிறதா மலேசியா?

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
கோவிட்-19 வைரஸ் பரவலை தடுக்கும் கடந்த ஒன்றரை மாதங்களாக அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் மூடபட்ட நாட்டின் பொருளாதாரத் துறை மீண்டும் செயல்பட அனுமதியளத்திருப்பதன் வாயிலாக மலேசியா ஒரு விஷப் பரீட்சையில் களம் காண்கிறது.

வரும் 4ஆம் தேதி முதல் தொழில்துறைகள், உணவகங்கள் உட்பட பல துறைகள் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படும் என்று பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் இன்று அறிவித்தார்.

கோவிட்-19 வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையில் அளிக்கப்பட்டுள்ள இந்த தளர்வு மலேசியர்களை பேராபத்தில் தள்ளி விடும் விபரீதத்திற்கு அடித்தளமாய் அமையலாம்.

மருந்துகள் கண்டுப்பிடிக்கப்படாத கோவிட்-19 வைரஸ் பரவலுக்கு சமூக இடைவெளியே ஆக்கப்பூர்வ நடவடிக்கையாக இவ்வளவு நாட்கள் கடைபிடிக்கப்பட்டு வந்தது.

ஆனால் இப்போது அறிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் துறை மறு செயல்பாட்டினால் சுருங்கக்கூடும் சமூக இடைவெளிகள் இந்த வைரஸ் இன்னும் அதிவேகத்தில் பரவி மனிதஉயிர்களுக்கு  பேராபத்தாக அமையலாம் என்பதை மறுக்க முடியாது.

தொழில்துறை காரணமாக மக்கள் ஒன்றுகூடும் பொது இடங்களில் இந்த வைரஸ் தொற்று மீண்டும் விஸ்வரூபம் எடுக்கலாம். அச்சமயம் தற்போது நாம் சந்தித்து கொண்டிருக்கும் உயிர்பலியை விட பேரழிவை சந்திக்கக்கூடய ஆபத்து உள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கும் மனித உயிருக்குமான விஷப் பரீட்சையில் கொரோனா வைரஸ் எதை வீழ்த்தப்போகிறது? என்பதே விடை காண முடியாத கேள்வியாகும்.

No comments:

Post a Comment