Sunday 3 May 2020

கோவிட்-19 : சமூகச் சேவையை முன்னெடுத்தது டோவன்பி தோட்ட மாரியம்மன் ஆலயம்

சுங்கை சிப்புட்-
கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையினால் வீட்டுக்குள் முடங்கிய மக்களுக்கு உதவும் வகையில் சுங்கை சிப்புட், டோவன்பி தோட்ட ஸ்ரீ மகா மாரயம்மன் ஆலய நிர்வாகத்தினர. தங்களது சமூகக் கடப்பாட்டினை நிறைவேற்றினர்.

வேலைக்குச் செல்ல முடியாமல் வருமானம் இன்றி அல்லல்படும் மக்களின் துயரினை போக்கும் வகையில் இக்குடியிருப்பிலுள்ள 250 பேருக்கு மளிகைப்பொருட்களை வழங்கினர் ஆலய நிர்வாகத்தினர்.

இன, சமய வேறுபாடின்றி இந்தியர்களுக்கு மட்டுமல்லாது மலாய்க்காரர், சீனர்களுக்கும் இந்த உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டதாக ஆலயத் தலைவர் எம்.மனோகரன் தெரிவித்தார்.

இதுபோன்ற பேரிடர் காலத்தில் சமூகச் சேவைகளில் ஆலய நிரவாகம் ஈடுபடுவது அவசியமானது எனும் அடிப்படையில் இந்த உதவிகள் வழங்கப்பட்டதாக கூறிய அவர், இம்முயற்சிக்கு துணை நின்ற ஆலய செயலவையினருக்கும் ஆதரவுகரம் நீட்டியவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக சொன்னார்.

No comments:

Post a Comment