Tuesday 26 May 2020

மீண்டும் மூன்று இலக்காக உயர்ந்த கோவிட்-19 பாதிப்பு

கோலாலம்பூர்-
உயர் கொல்லி நோயான கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மீண்டும் மூன்று இலக்காக உயர்ந்துள்ளது.
கடந்த  சில நாட்களாக இரு இலக்காக மட்டுமே இருந்த பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று 172 ஆக உயர்வு கண்டுள்ளது.

நேற்று 60ஆக மட்டுமே இருந்த இந்த எண்ணிக்கை இன்று மூன்று இலக்காக உயர்ந்துள்ளது மலேசியர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இன்று புதிய மரணம் எதும் நிகழாத நிலையில் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,417ஆக உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment