Saturday 9 January 2021

சிலாங்கூரிலும் தைப்பூசக் கொண்டாட்டம் கிடையாது - கணபதிராவ்

 ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

கோவிட்-19 பரவல் தொற்று காரணமாக சிலாங்கூரிலும் தைப்பூசக் கொண்டாட்டம் ரத்து செய்யப்படுவதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.

தைப்பூச விழாவை போன்று ஆண்டுதோறும் மாநில அளவில்  கொண்டாடப்படும் பொங்கல் விழாவும் ரத்து செய்யப்படுவதாக குறிப்பிட்ட அவர், இதற்கான மானிய ஒதுக்கீடுகள் இந்தியர்களின் சமூக நலன் சார்ந்த உதவித் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என்றார்.

இவ்வாண்டு நடத்தப்படும் எந்தவொரு தைப்பூச விழாவிலும் மக்கள் பங்கெடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்திய கணபதிராவ், தைப்பூசம் போன்ற சமய நிகழ்வுகளை வீட்டில் இருந்தபடியே வழிபாடுகளை மேற்கொள்ளலாம் என்று குறிப்பிட்டார்.

கோவிட்-19 பெருந்தொற்று பரவலை தடுக்கும் வகையில் பெரிய அளவிலான ஒன்றுகூடல் நடவடிக்கைகளை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று கணபதிராவ் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக பினாங்கிலும் இவ்வாண்டு தைப்பூசக் கொண்டாட்டம் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment