Friday 29 January 2021

மாலை மரியாதை நிமித்தமாகவே முகக்கவரியை கழற்றினேன் - டத்தோஶ்ரீ சரவணன்

 கோலாலம்பூர்-

பத்துமலை தேவஸ்தானம் வழங்கிய மாலை மரியாதையை ஏற்பதற்காகவே முகக்கவரியை கழற்றினேன். அதுவும் சிறிது நேரம் மட்டுமே என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் விவரித்தார்.

தைப்பூச திருநாளையொட்டி பத்துமலை திருத்தலத்தற்கு டத்தோஸ்ரீ சரவணன் சென்றதும் முகக்கவரியை அணியவில்லை என்றும் கோவிட்-19 எஸ்ஓபி-ஐ மீறினார் எனவும் சமூக ஊடகங்களில் சிலர் விமர்சனம் செய்தனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த டத்தோஶ்ரீ சரவணன், தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வெள்ளி ரதம் புறப்படுவதற்கு உதவி புரிந்ததன் அடிப்படையில் ஆலய நிர்வாகம் முன்வைத்த அழைப்பு ஏற்றுக் கொண்டே பத்துமலைக்குச் சென்றேன். 

அதுவும் ஆலயத்திற்குச் செல்வதற்கு போலீசாரின் அனுமதியை பெற்றப் பின்னரே அங்கு சென்றேன். அங்கு ஆலய தரப்பில் மாலை அணிவித்தபோது மரியாதை நிமித்தமாக முகக்கவரியை கழற்றி மாலையை பெற்றுக் கொண்டேன், அதுகூட சில நிமிடம் மட்டுமே. பின்னர் முகக்கவரியை அணிந்து கொண்டேன்.

மேலும், மேளதாளங்கள் இசைக்க ஏற்பாடு செய்யப்பட்டது தமக்கு தெரியாது. அங்கு சென்ற பின்னர்  மேளதாளங்கள் இசைக்கப்பட்டதை அப்போதுதான் உணர்ந்ததாக அவர் மேலும் சொன்னார்.


No comments:

Post a Comment