Saturday 9 January 2021

பயணிகள் விமானம் மாயம்- இந்தோனேசியாவில் அதிர்ச்சி

 ஜகார்த்தா-

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து 50 பயணிகளுடன் புறப்பட்ட போயிங் 737 விமானம் காணாமல் போயுள்ளது.

ஶ்ரீ விஜயா ஏர்  விமான நிறுவனத்திற்கு சொந்தமான இந்த விமானம் மேற்கு கலிமந்தான் மகாணத்திலிருந்து பொந்தியானாக் எனும் இடத்திற்கு தனது சேவையை மேற்கொண்டிருந்தது.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு நிலைத்துடனான தொடர்பை இழந்தது. அந்த விமானம் பறந்து கொண்டிருந்த உயரம் திடீரென 10 ஆயிரம் அடி குறைந்தது என்று விமான கண்காணிப்பு இணையத் தளமான Flightrader24.com தகவல் தெரிவித்துள்ளது.

விமானம் குறித்த தகவலை பெற முயன்று வருவதாக ஶ்ரீ விஜயா ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, தேடுதல், மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருவதாக அந்நாட்டு போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment