Saturday 16 January 2021

பிகேபி அமலிலும் கட்டுக்குள் அடங்காத கோவிட்-19

கோலாலம்பூர்-

கோவிட்-19 வைரஸ் தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நாட்டில் 6 மாநிலங்களில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பிகேபி) அமல்படுத்தப்பட்ட நிலையிலும் கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இன்று உச்சக்கட்டத்தை எட்டும் வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 4,029 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று இந்நோயினால் 8 பேர் மரணமடைந்த நிலையில் மரண எண்ணிக்கை 594ஆக பதிவு செய்ய்பட்டுள்ளது.

இந்த பெருந்தொற்றை கட்டுப்படுத்த பிகேபி அம்படுத்தப்பட்டு 4 நாட்களை கடந்த நிலையில் இந்நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகபட்சமாக உயர்வு கண்டிருப்பது நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment