Monday 11 January 2021

சிலாங்கூர், கேஎல் உட்பட 6 மாநிலங்களில் மீண்டும் பிகேபி

  புத்ராஜெயா-

கோவிட்-19 வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை (பிகேபி) மீண்டும் அமலாக்கம் செய்யப்படவுள்ளதாக பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் அறிவித்தார்.

6 மாநிலங்களை மட்டும் உள்ளடக்கி பிகேபி அமலாக்கம் காணவுள்ளது. பினாங்கு, சிலாங்கூர், மலாக்கா, ஜோகூர், சபா, கூட்டரசு பிரதேசம் (கோலாலம்பூர், புத்ராஜெயா, லாபுவான்) ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

மேலும், கெடா, கிளந்தான், பேராக், திரெங்கானு, நெகிரி செம்பிலான், பகாங் ஆகிய மாநலங்களில் பிகேபிபி எனப்படும் கடுமையாக்கப்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமலாக்கம் செய்யப்படவுள்ளது. 

ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி ஜன.26ஆம் தேதி வரை அமல்படுத்தப்படவுள்ள பிகேபி,பிகேபிபி நடவடிக்கையால் மாநிலம், மாவட்டம் கடந்து செல்வதற்கு தடை விதிக்கப்படுவதாக டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தமது சிறப்பு செய்தியில் இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment