Friday 29 January 2021

உச்சமடையும் கோவிட்-19; தோல்வி காண்கிறதா பிகேபி?

கோலாலம்பூர்- 

பெரும் அச்சுறுத்தலாக மாறி வரும் கோவிட்-19 பெருந்தொற்றை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பிகேபி) தோல்வி கண்டுள்ளதா? எனும் கேள்வி மக்களிடத்தில் எழுந்துள்ளது.

கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இன்று இந்நோயின் தீவிரம் 5ஆயிரமாக உயர்வு கண்டுள்ளது.

கோவிட்-19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பிகேபி அமல்படுத்தப்பட்டு இரு வாரங்களை கடந்து விட்ட நிலையில் அதன் தீவிரம் இன்னும் அதிகமாகவே உள்ளது.

நிலைமை இவ்வாறே சென்றுக் கொண்டிருந்தால் பிகேபி அமல்படுத்தி என்ன பயன்? என்று கேள்வி பெருவாரியான மக்களிடையே எழுந்துள்ளது.

No comments:

Post a Comment