Sunday 24 January 2021

கோவிட்-19 பாதிப்பு குறையவில்லையென்றால் பொருளாதார முழு அடைப்பு சாத்தியமாகலாம்?

கோலாலம்பூர்-

வரும் பிப்ரவரி 4ஆம் தேதிக்குள் கோவிட்-19 வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாமல் போனால் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்கும் வகையில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பிகேபி) இறுக்கமாக்கப்படலாம் என கூறப்படுகிறது.

மலேசிய-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக தொழிலியல் சபை (Eurocham Malaysia) அதன் உறுப்பினர்களுக்கு அனுப்பியிருக்கும் கடிதத்தில் அந்த தகவலை குறிப்பிடப்பட்டிருக்கிறது.அந்த அமைப்புடன் தொடர்புடைய தரப்பு அந்த தகவலை உறுதிப்படுத்தியிருக்கிறது.

அனைத்துலக வாணிப தொழிலியல் அமைச்சுடன் Eurocham Malaysia  அமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தையில் பொருளாதார நடவடிக்கைகளை முழுமையாக நடத்தி வைக்கும் விவகாரத்தில் சுகாதார அமைச்சு உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

நாட்டில் தயாரிப்பு துறையைச் சேர்ந்த 99 கோவிட்-19 தொற்று மையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதையடுத்து அத்துறை கோவிட்-19 வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணமாக இருப்பதாக சுகாதார அமைச்சு கருதுகிறது.

எனவே, வர்த்தக தொழில்துறையில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் அனைத்தும் கோவிட்-19 தொற்றை குறைப்பதில் மேலும் ஆக்கப்பூர்வமாக செயல்படுமாறு அனைத்துலக வாணிப தொழிலியல் அமைச்சு வலியுறுத்தி இருக்கிறது.

No comments:

Post a Comment