Thursday 21 January 2021

எல்லை மீறிச் செல்லும் கெடா மந்திரி பெசார்- கணபதிராவ் சாடல்

ரா.தங்கமணி 

ஷா ஆலம்-

தைப்பூச திருநாளுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு விடுமுறையை ரத்து செய்வதாக அறிவித்த கெடா மாநில மந்திரி பெசார் முகமட் சனுசியின் செயல் இனத்துவேஷம் நிறைந்தது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் சாடினார்.

இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் அண்மைய காலமாக சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வரும் அவரின் செயல் எல்லை மீறி கொண்டிருக்கிறது எனவும் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் காரணமாக தைப்பூச விழா ரத்து செய்யப்பட்டுள்ளதை காரணம் காட்டி சிறப்பு விடுமுறையை ரத்து செய்யும் கெடா மாநில மந்திரி பெசார் பிற மதத்தினரின் பெருநாள் காலத்திலும் இதே நடவடிக்கையை கடைபிடிப்பாரா? என்று கணபதிராவ் தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.


No comments:

Post a Comment