Friday 8 January 2021

கோவிட்-19: ஒரே நாளில் 16 பேர் மரணம்

கோலாலம்பூர்-

கோவிட்-19 வைரஸ் தொற்று பெருந்தொற்றின் காரணமாக இன்று ஒரே நாளில் 16 பேர் மரணமடைந்துள்ளனர். இந்நோய் தொற்று பரவத் தொடங்கிய நாள் முதல் ஒரே நாளில் அதிகமானோர் மரணமடைவது இதுதான் முதல் முறையாகும்,

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவிட்-19 பெருந்தொற்றுக்கு இன்று 2,643 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இன்று ஒரே நாளில் 16 பேர் மரணமடைந்துள்ள நிலையில் கோவிட்-19க்கு மரணமடைந்தோரின் எண்ணிக்கை 537ஆக பதிவாகியுள்ளது.

2,643 பேரில் 63 விழுக்காட்டினர் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் எனவும் 37 விழுக்காட்டினர் அந்நிய நாட்டினர் எனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment