Wednesday 27 January 2021

டத்தோஸ்ரீ சரவணன் தலையீட்டில் பினாங்கு நகரத்தார் வெள்ளிரத ஊர்வலம் - பேராசிரியர் இராமசாமி

ஜோர்ஜ்டவுன்-

பினாங்கு நகரத்தார் ஆலயத்தின் வெள்ளி ரத ஊர்வலம் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தலையீட்டில் நடைபெற்றதே தவிர பினாங்கு மாநில அரசும் தேசிய பாதுகாப்பு மன்றமும் அனுமதி வழங்கவில்லை என்று அம்மாநில துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி விவரித்தார்.

கோவிட்-19 பாதிப்பு காரணமாக இவ்வாண்டு தைப்பூச விழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பினாங்கு தண்ணீர்மலை நகரத்தார் ஆலயத்தின் வெள்ளி ரத ஊவலமும் இடம்பெறாது என முன்பு அறிவிக்கப்பட்டது.

ஆனால் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் விண்ணப்பத்திற்கு ஏற்ப பத்துமலை வெள்ளிரத ஊர்வலத்திற்கு தேசிய பாதுகாப்பு மன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து பினாங்கு நகரத்தார் ஆலயத்தினரும. வெள்ளிரத ஊர்வலத்திற்கு அனுமதி கோரியிருந்தனர்.

விளம்பரம்

ஆனால் மாநில அரசு அது குறித்து விவாதிக்காத நிலையில் டத்தோஸ்ரீ சரவணன் தலையீட்டில் பினாங்கு நகரத்தார் ஆலயத்தினர் வெள்ளிரத ஊர்வலத்தை முன்னெடுத்துள்ளனர் என்று பேராசிரியர் இராமசாமி இன்று செய்தியாளர்களிடம் விவரித்தார்.

இதனிடையே இச்சம்பவம் தொடர்பில் பேராசிரியர் இராமசாமிக்கு தொலைபேசி மூலம் விளக்கமளிக்கப்படும் என்று டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment