Wednesday 27 January 2021

பத்துமலை திருத்தலத்தை வந்தடைந்தது வெள்ளிரதம்

 ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் பெருவிழாவான தைப்பூச விழாவை முன்னிட்டு கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்ட வெள்ளிரதம் பத்துமலையை சென்றடைந்தது.

வள்ளி, தெய்வானை சமேதரராய் வெள்ளிரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் முருகப் பெருமான், இவ்வாண்டு பக்தர்கள் கூட்டமின்றி பத்துமலை திருத்தலத்தை நோக்கி தனது புறப்பட்டார்.

விளம்பரம்


அதிகாலை 3.00 மணியளவில் கோலாலம்பூர் மாரியம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்ட வெள்ளி ரதம் 4 மணிநேர பயணத்திற்கு பின்னர் பத்துமலையை வந்தடைந்தது.

No comments:

Post a Comment