Friday 26 June 2020

இந்தியர், சீனர் பிரதிநிதிகள் நியமனம் செய்யப்படாதது ஏன்? மஇகா இளைஞர் பிரிவு கண்டனம்

ரா.தங்கமணி

ஈப்போ-
பேரா மாநில அரசில் இந்தியர்களையும் சீனர்களையும் பிரதிநிதிக்கக்கூடிய பிரதிநிதிகள் இன்னமும் நியமனம் செய்யப்படாமல் இருப்பதற்கு மஇகா இளைஞர் பிரிவு தமது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியிடமிருந்து ஆட்சியை கைப்பற்றியுள்ள பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் மஇகாவும் மசீசவும் ஓர் அங்கமாக வகித்துள்ளன.

ஆனால் பேரா மாநிலத்தில் கடந்த மார்ச்  ஆட்சி அமைத்த பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணயணி இந்தியர்,சீனர் பிரதிநிதிகளை இன்னமும் நியமனம் செய்யாமல் காலம் தாழ்த்துவது வேடிக்கையாக உள்ளது என்று மஇகா இளைஞர் பிரிவு மத்திய செயலவை உறுப்பினர் ஸ்ரீ முருகன் குறிப்பிட்டார்.

முந்தைய தேசிய முன்னணி அரசில் சிறப்பு ஆலோசகர் பதவி மஇகாவுக்கு வழங்கப்பட்டது.  ஆனால் இப்போது இந்தியர், சீனர் பிரதிநிதிகள்  இல்லாமல் இருப்பது மக்களுக்கு சுமையாக மாறியுள்ளது.

குறிப்பாக, மாநில அரசின் உதவிகளை பெற விரும்பும் இந்தியர்கள் இந்திய பிரதிநிதித்துவம் இல்லாத சூழலில் தங்களது தேவைகளுக்கு எவ்வாறு உதவிகள் கிடைக்கப்பெறும்.

இந்தியர்களும் சீனர்களும் மாநில அரசில் பங்களிப்பை வழங்காத நிலையில் சிறப்பு நியமனங்களின் வழி இவ்விரு சமூகத்திற்கும் மாநில உதவித் திட்டங்கள் சென்றடைவதற்கு பிரதிநிதிகளை நியமனம் செய்ய வேண்டும்.

இந்த நியமனத்தை மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமாட் ஃபைசால் சீக்கிரமே அமல்படுத்த வேண்டும் என்று ஸ்ரீ முருகன் மேலும் சொன்னார்.

No comments:

Post a Comment