Tuesday 9 June 2020

மகாதீரை காட்டிலும் முஹிடினே மக்கள் விரும்பும் பிரதமர்- வீரன்

 ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
பிரதமர் பதவியில் துன் மகாதீரை காட்டிலும் டான்ஸ்ரீ முஹிடின் யாசினின் தலைமைத்துவம் சிறப்பானதாக அமைந்துள்ளதோடு மக்கள் விரும்பும் நல்லாட்சி வழங்கப்பட்டு வருவதாக மஇகா மத்திய செயலவை உறுப்பினர் மூ.வீரன் குறிப்பிட்டார்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலின்போது பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டு பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி அமைத்தது.

ஆனால் எதிர்பார்த்தப்படி மக்களுக்கான சிறந்த சேவையை வழங்க முடியாமல் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தடுமாறியது.

பிரதமர் துன் மகாதீரின் தலைமைத்துவம் மக்களுக்கு சோதனை நிறைந்த ஆட்சியை வழங்கிய நிலையில் மக்கள் உதவித் திட்டங்களுக்குக்கூட பணம் இல்லை என சாக்குப்போக்கு சொல்லப்பட்டது.

ஆனால் டான்ஸ்ரீ முஹிடின் பிரதமராக பொறுப்பேற்ற காலகட்டம் மிகவும் சவாலானது ஆகும்.

நாட்டில் நிலைத்தன்மையில்லா அரசியல் சூழலோடு கோவிட்-19 வைரஸ் தொற்று பாதிப்பும் அதிகரிக்கத் தொடங்கிய காலகட்டம் அது.

பொருளாதாரச் சவால் நிறைந்த சூழலிலும் மக்கள் பாதுகாப்பு முக்கியமானது எனும் நிலைப்பாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (எம்சிஓ) அமல்படுத்திய டான்ஸ்ரீ முஹிடின், மக்களுக்கான உதவித் திட்டத்தை அறிமுகப்படுத்தியதோடுபொருளாதார மீட்சிக்கான திட்டத்தையும் வகுத்தார்.

4ஆவது பிரதமர், அரசியல் முதிர்ச்சி பெற்றவர் என்பதை தாண்டி கடந்த ஈராண்டு கால பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் தோல்வி கண்ட பிரதமராக துன் மகாதீர் திகழ்கிறார்.

ஆனால் மூன்று மாத கால ஆட்சியில் மக்களுக்கான திட்டங்களை வகுத்து மக்களை பாதுகாத்து பொருளாதாரத்தையும் வலுபடுத்தி மக்கள் விரும்பும் பிரதமராக டான்ஸ்ரீ முஹிடின் யாசின் திகழ்கிறார் என்று தைப்பிங் மாநகர் மன்ற உறுப்பினருமான வீரன் திகழ்கிறார்.

No comments:

Post a Comment