Wednesday 3 June 2020

ஜோகூர் சட்டமன்றத்தை கலைத்து விடுவேன் - சுல்தான் எச்சரிக்கை

ஜோகூர்பாரு-
சட்டமன்ற உறுப்பினர்களிடையே தொடர்ந்து அதிகாரப் போராட்டம் நீடிக்குமானால் மாநில சட்டமன்றத்தை கலைத்து விடுவேன் என்று ஜோகூர் மாநில சுல்தான் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் எச்சரித்தார்.

தமது ஃபேஸ்புக் பக்க்த்தில் கருத்து பதிவிட்ட அவர், அதிகாரப் போராட்டத்தில் ஜோகூரை வீணடிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.

மக்கள் பிரதிநிதிகளிடையே தொடர்ந்து அதிகார மோதல் நீடிக்குமானால் மாநில சட்டமன்றத்தை கலைத்து விடுவேன்.

மக்கள் பிரதிநிதியாக தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது மக்களுக்கும் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் சேவையாற்ற தானே தவிர சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு கட்சிக்கும் சேவையாற்ற அல்ல என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment