Monday 1 June 2020

முஹிடினுக்கு தேவை பெரும்பான்மை; நஜிப்புக்கு தேவை பொதுத் தேர்தல்- ஜோகூர் டிஏபி சாடல்

ஜோகூர்பாரு-
நாட்டின் இன்றைய நடப்பு சூழலில் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்புக்கு பொதுத் தேர்தலும் பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசினுக்கு நாடாளுமன்றத்ததில் பெரும்பான்மை தேவைபடுவதாகவும் ஜொகூர் மாநில டிஏபி தலைவர் லியூ சின் தொங் கூறினார்.

பொதுத் தேர்தலை தவிர்த்து விட்டு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை தன் பக்கம் இழுக்கும் நடவடிக்கையை முஹிடின் யாசின் முன்னெடுக்கின்றார்.


அதன் அங்கமாக பக்காத்தான் ஹராப்பானைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை தன் பக்கம் இழுப்பதில் அதி தீவிரமாக செயல்படுகிறார். ஆனால் நஜிப் பொதுத் தேர்தல் நடத்தப்படுவதையே விரும்புகிறார்.

முஹிடின் யாசின் பிரதமராக பதவி வகிப்பதை அவர் (நஜிப்) விரும்பவில்லை எனும் தகவல் ஒன்று பரவும் நிலையில் இவ்வாண்டு பிற்பகுதியில் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு  அம்னோ நெருக்குதல் கொடுக்கலாம் என்று அவர் மேலும் சொன்னார்.

No comments:

Post a Comment