Monday 1 June 2020

முடி திருத்தும் சேவைக்கு தடை நீடிக்கிறது

கோலாலம்பூர்-
முடி திருத்தும் சேவைக்கு இன்னும் அனுமதிக்கப்படவில்லை. அதற்கான தடை தொடர்ந்து நீடிக்கிறது என்று முதன்மை பாதுகாப்பு அமைச்சர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

முடி வெட்டும் கடைகள் திறப்பது உட்பட வீட்டுக்கு அழைத்து முடி வெட்டுவதற்கும் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

இந்த சேவைக்கான தர நிர்ணய செயல்பாடு (SOP) இன்னும் வரையறுக்கப்பட்டு கொண்டிருக்கிறது எனவும் அப்பணி நிறைவடைந்த பின்னர் தேசிய பாதுகாப்பு மன்றம் அதனை தாக்கல் செய்யும்.

சுகாதார அமைச்சுடன் இணைந்து வரையப்படும் தர நிர்ணய செயல்பாட்டுக்கு பின்னர் முடி திருத்தும் கடைகளை திறப்பது குறித்த முடிவெடுக்கப்படும். SOP வரைதிட்டத்திற்கு  பின்னரே முடிவெடுக்கப்படும் என்று இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறூ கூறினார்.

No comments:

Post a Comment