Thursday 11 June 2020

எம்சிஓ காலக்கட்டத்தில் 46.7% குற்றச்செயல்கள் குறைந்துள்ளன

கோலாலம்பூர்-
கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் அமல்படுத்தப்பட்ட  MCO எனப்படும் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை , CMCO எனப்படும்  நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஆகிய காலகட்டங்களில் குற்றச்செயல்களின் விகிதம் பெருமளவு குறைந்துள்ளது.

இக்காலக்கட்டத்தில் 46.7 சதவீத குற்றச்செயல்கள் சரிவு கண்டுள்ளன என்று புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வு பிரிவின் இயக்குனஎ ஹுஸீர் முகமட் தெரிவித்தார்.

எம்சிஓ அமல்படுத்தப்பட்ட 84 நாட்களில் 10,134 குற்றச்செயல்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன என்று குறிப்பிட்ட அவர், கடந்த காலத்தோடு ஒப்பிடும்போது இவ்வெண்ணிக்கை 19.014ஆக இருந்தது.

கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற வன்முறை குற்றங்கள், வாகனம் திருட்டு,ம் வழிப்பறி போன்ற சொத்துடைமை குற்றம் என இருவகைப்படும் இவ்வகை குற்றங்கள் எம்சிஓ காலகட்டத்தில் 46.7 விழுக்காடு அதாவது 8,880 குற்றங்கள் குறைந்துள்ளன என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment