Wednesday 10 June 2020

சொந்த ஊர்களுக்கு செல்வபவர்கள் எஸ் ஓபி-ஐ பின்பற்ற வேண்டும்

கோலாலம்பூர்-
வார இறுதி நாட்களில் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவர்கள் தர நிர்ணய செயல்பாட்டு முறையை (எஸ்ஓபி) பின்பற்ற வேண்டும் என்று தற்காப்பு முதன்மை அமைச்சர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோர் தெரிவித்தார்.

கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (எம்சிஓ) அறிமுகம் செய்யப்பட்ட போது மாநிலம் கடந்து வேறு மாநிலங்களுக்கு செல்வது தடை செய்யப்பட்டது.

இப்போது இந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் தங்களின் குடும்பத்தினரை பார்க்கச் செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. அதுவும் இவ்வார இறுதி நாட்களின் இவ்வெண்ணிக்கை கூடுதலாக அமையும். 

ஆனால் சொந்த ஊர்களுக்குச் செல்பவர்கள் அரசாங்கம் அமல்படுத்தியுள்ள எஸ்ஓபி-ஐ முறையாக பின்பற்ற வேண்டும். ஆர்& ஆர் பகுதிகளில் கட்டாயம் எஸ்ஓ பி முறையை பின்பற்ற வேண்டும் என்பதோடு போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர் என்று அவர் சொன்னார்.

No comments:

Post a Comment